முன்னோடி விளையாட்டரங்கம்
விளையாட்டு
கிராமத்தில் அமைகிறது.......
திருவாரூர்
மாவட்டம், மன்னார்குடி டூ தஞ்சாவூர் சாலையில் உள்ளது வடுவூர் கிராமம்.
இக்கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம், குறிப்பாக கபடி, வாலிபால், தடகளப்
போட்டிகளில் சர்வதேச, தேசிய அளவில் முத்திரை பதித்தவர்கள் பலர் உள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 200 பேருக்கும் மேலாக காவல்துறையிலும், ரயில்வே, மின்சார
வாரியம், போக்குவரத்து என மத்திய, மாநில அரசு துறைகளில் விளையாட்டால் வேலைவாய்ப்பு
பெற்றவர்கள் பலர், குடும்பத்திற்கு ஒருவர் விளையாட்டு வீர்ராக திகழ்கின்றனர்.
இதனால் “வடுவூர்” விளையாட்டு கிராமம் என்று அழைக்கப்டுகின்றது. வடுவூரில் மேலும்
சாதனையாளர்களை உருவாக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் (ஸ்டேடியம்) வேண்டும் என்று
பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது. இது குறித்து பத்திரிக்கை, தொலைக்காட்சி
ஊடகங்கள் வாயிலாக கருத்தை பதிவு செய்தனர். மக்களின் தொடர்
முயற்சியால், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்களின்
முயற்ச்சியில், தஞ்சை – மன்னை சாலையில் வடவாறு கரையோரம் விளையாட்டு
அரங்கத்திற்க்கு வாங்கப்பட்டுள்ள 4 ஏக்கர் நிலத்தில், முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை
அமைச்சர் திரு.அஜய் மக்கானிடம் உதவி கோரப்பட்டது.
ஊர் மக்களின்
ஆர்வம், மற்றும் திரு.டி.ஆர்.பாலு அவர்களின் தொடர் முயற்சியைத் தொடர்ந்து,
வடுவூரில் ரூ.6 கோடி செலவில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கம் அமைக்க மத்திய
அமைச்சர் அனுமதியளித்துள்ளார். இதன்படி, சர்வதேச தரத்தில் கபடி, வாலிபால்,
கூடைப்பந்து மற்றும் தடகள மைதானங்களுடன் கூடிய உள் விளையாட்டரங்கம், அமைகிறது.
இதன் தரைத் தளம் தேக்கு மரத்தாலும், மேற்கூரை அலுமினியத்தாலும் அமைக்கப்படும்.
இந்தியாவில் ஒரு கிராமத்தில் இதுப்போன்ற விளையாட்டரங்கம் அமைக்கப்படுவது. இதுவே
முதல் முறையாகும். எனவே நாட்டின் முன்னோடி திட்டம் இப்பணிகள் விரைவில்
தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் விளையாட்டரங்கம்
அமைவதால், வடுவூர் மட்டுமள்ளாது ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தினை சேர்ந்த
விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சியின்
வெளிப்பாடாக நீண்ட இடைவெளிக்கு பிறகு கபடி, கைபந்து பயிற்ச்சி முகாம் தற்போது
நடத்தப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
விளையாட்டு அரங்கம் அமைந்ததும் உலகளவில் தடம் பதிக்கும் வீரர்கள் இங்கு பட்டை
தீட்டப்படிவார்கள். அவர்களால் ஊருக்கும் நாட்டிற்கும் பெருமை சேரும் என்று வடுவூர்
மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற
வாழ்த்துக்கள்..............
FB: Jo.Maheswaran
அடித்தளம்
அமைத்தவர்:
இந்தியாவின்
முன்னோடி திட்டமாக வடுவூர் கிராமத்தில் விளையாட்டு அரங்கம் அமைகிறது. இதற்க்கு
அடித்தளமிட்டவர். அதே ஊரைச் சேர்ந்த பத்திரிகையாளர் திரு.ஜோ.மகேஸ்வரன்
ஆவார். கபடி வீரரான இவர், வடுவூரின் பெருமை குறித்து 2010ம் ஆண்டு பிப்ரவர் 8ம்
தேதி (பக்.52-55) குங்குமம் இதழில் சிறப்பு செய்திக் கட்டுரை எழுதினார். பிற
ஊடங்களிலும் இதை தொடர்ந்து பதிவு செய்தார். இதையடுத்து அப்போதைய திருவாரூர்
மாவட்ட ஆட்சியர் திரு.சந்திரசேகரன், வடுவூர் பகுதியினரை நேரில் அழைத்து, நமக்கு
நாமே திட்டத்தின் கீழ் விளையாட்டரங்கம் அமைக்க அறிவுறுத்தினார்.
விளையாட்டரங்கம்
அமைக்க நிலம் வாங்க, மக்களிடம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்ட்து. இதை
முன்னேடுக்க வடுவூர் விளையாட்டு குழுமம்ன் (ஸ்போர்ட்ஸ் அகாடமி)
ஏற்ப்படுத்தப்பட்டது. வடுவூரினை சேர்ந்த தொழிலதிபர்கள் திரு.பந்தல் சிவா,
திரு.அன்புவேல்ராஜன், திரு.அருட்செல்வம், திரு.கமலகண்ணன் ஆகியோர் தலா ரூ.3
லட்சம் வழங்கி நிதியுதவி அளித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்,
விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என
பலதரப்பினரும் நன்கொடை அளித்தனர். திரு.இராமசாமி ஐயங்கார் மனைவி திருமதி.பூமா
மற்றும் அவரது வாரிசுகள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்கினர்.
இத்துடன் சுமார் 3 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்ட்து. அந்த இடத்தில் தான்
விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.
திமுக
நாடாளுமன்ற குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்
திரு.ஜோ.மகேஸ்வரன் அவர்களுக்கும், மற்றும் நன்கொடை அளிதவர்களுக்கும், முயற்ச்சி
செய்தவர்களுக்கும் ஒட்டுமொத்த திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம்
மக்களும், தங்களது நன்றியினையிம், வாழ்த்துகளையிம் இவர்களுக்கு தெரிவித்த வண்ணம்
உள்ளனர்.
|
what the fuck
ReplyDelete