Sunday, 17 November 2013

தேவர் ஒரு தெய்வப்பிறவி


 
23-6-1933-ல் சாயல்குடி, சுவாமி விவேகானந்தர் வாசகசாலை ஆண்டு விழாவில் “விவேகானந்தரின் பெருமை” என்பது பற்றி பேசிய ஆன்மீகப்பொதுக்கூட்டம் தான் தேவரவர்களின் முதல் பொதுக்கூட்டம்.

யாரும் எதிர்பாராதபடி விவேகானந்தரின் பெருமைகளை சுமார் 3 மணி நேரம் பேசிய அப்பெருமகனாரின் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தை “சுவாமி விவேகானந்தரின் வழியில் நின்று தேசியத்தின் விடுதலையை வென்றேடுப்போம் ! – என்பது தான்

14-1-1962-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் பேசிய தேர்தல் பொதுக்கூட்டம்தான் தேவர் திருமகனாரின் கடைசிப்பொதுக்கூட்டம்.

சுமார் 3 மணி நேரம் பேசிய அப்பொதுக்கூட்ட்த்தில், அப்பெருமகனார் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தை “தேசியத்தைக்காப்பாற்றும்படி வேண்டுகிறேன் – என்பது தான்

ஆம் ! தமது முதல் கூட்டத்திலும் தேசியம் – தெய்வீகம் பற்றிப்பேசினார். தமது கடைசிக்கூட்ட்த்திலும் அதே தேசியம், தெய்வீகம் பற்றிப்பேசினார் !

தேவர் ஒரு தெய்வப்பிறவி

No comments:

Post a Comment