Sunday, 17 November 2013

வடுவூர் (விளையாட்டுக்கிராமம்)


வடுவூர் மண்ணில் பிறக்கும் புல், பூண்டுக்கூட இங்கு பிறந்ததை நினைத்து பெருமைப்படும்
.
வடுவூர் (விளையாட்டுக்கிராமம்)
சோழர் குல மாமன்னன் கரிகாலசோழத்தேவர் அவர்கள், பாண்டியர், சேரர், மற்றும் ஒன்பது குறுநில மன்னர்களை வெண்ணிப்பரந்தலை என்னும் போரில் எதிர்த்துப் `போரிட்டு மிகப்பெரிய  வெற்றிப்பெற்றார். அவ்வெற்றியுடன் தனது தலைநகரான தஞ்சாவூர் நோக்கி செல்லும்போது சோழ வீரர்கள் போரினால் களைப்புற்றிருந்தனர் மேலும் பல இடங்களில் காயங்களும் பட்டு இருந்ததால் மூலிகைகள் நிறைந்த ஓர் இடத்தில் தங்கி தங்கள் காயங்களை ஆற்றி செல்லலாம் என ஓர் இடத்தில் தங்கி காயங்களை ஆற்றினர். போரினால் ஏற்ப்படும் காயத்தினை வடு எனவும் அழைப்பர் எனவே வடுக்களை (காயங்களை) ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என வரலாற்றுப்பெயரினை பெற்றது எமது ஊர்.
மேலும்
வடுவூர் என்பதற்க்கு இயற்க்கை எழில் நிறைந்த அழகான
ஊர் எனவும் பொருள்ப்படும்.
எமது ஊரில் வீட்டுக்கு ஒரு விளையாட்டு வீரர் இருப்பார். தமிழகத்தின் வீர மாநில விளையாட்டான கபடி யினை உயிர் மூச்சாக நேசிக்கும் கிராமம் இது. மாநில அளவில் மட்டுமல்ல இந்திய அளவில ஏன் உலக அளவில் சாதனைப்படைத்தவர்கள் எங்கள் வடுவூர் கிராமத்தார்கள். எனவே தான் டெல்டா மாவட்டங்களில் எங்கள் ஊரினை விளையாட்டு கிராமம் என அழைக்கின்றனர்.
எமது ஊரில் ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி சீதாபிராட்டியார் மற்றும் சகோதரர் இலட்சுமணருடன்
அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமசுவாமியாக காட்சியளிக்கின்றார்.
இங்கு சமஸ்கிருத பாட சாலையும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு... தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் பல இடங்களில் இருந்தும் வடுவூர் பாடசாலையில் படிப்பவர்கள் பலர்.
எமது ஊரின் அழகிற்க்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது
வடுவூர் பறவைகள் சரணாலயம்    
இந்திய பறவைகளும், உலகில் பல பகுதிகளில் இருந்து வரும் பல வெளிநாட்டு பறவைகளின் புகழிடமாக எமது வடுவூர் சரணாலயம் திகழ்கின்றது.....
எண்ணற்ற விவசாய நிலங்களுக்கு பாசனத்தினை அளித்து வடுவூரினை  நெற்கதிர் நிறைந்த பசுமையான கிராமமாக மாற்றும் பெருமை எமது வடுவூர் பெரிய ஏரியினையே குறிக்கும். காவேரி தாயின் பிள்ளையாக பிரியும்  வடவாறு ஆற்றினால் வடுவூர் புனிதமடைகின்றது.
இவ்வாறு இன்னும் எமது ஊரின் பெருமையினை சொல்லிக்கொண்டேப்போகலாம் .....
 நானும் வடுவூர் காரன் என்பதில் பெருமைப்படுகின்றேன்.....
என்றும் அன்புடன் வடுவூர் எஸ் ஆர் சோழன் (எ) இராஜா சண்முகசுந்தரம் தேவர் ( நந்தியர்)





....

No comments:

Post a Comment