இந்த
ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது.
இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3
ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று
இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
சோழர் குல
மாமன்னன் கரிகாலசோழத்தேவர் அவர்கள், பாண்டியர், சேரர், மற்றும் ஒன்பது குறுநில
மன்னர்களை வெண்ணிப்பரந்தலை என்னும் போரில் எதிர்த்துப் `போரிட்டு மிகப்பெரிய வெற்றிப்பெற்றார். அவ்வெற்றியுடன் தனது
தலைநகரான தஞ்சாவூர் நோக்கி செல்லும்போது சோழ வீரர்கள் போரினால்
களைப்புற்றிருந்தனர் மேலும் பல இடங்களில் காயங்களும் பட்டு இருந்ததால் மூலிகைகள்
நிறைந்த ஓர் இடத்தில் தங்கி தங்கள் காயங்களை ஆற்றி செல்லலாம் என ஓர் இடத்தில்
தங்கி காயங்களை ஆற்றினர். போரினால் ஏற்ப்படும் காயத்தினை வடு எனவும் அழைப்பர் எனவே
வடுக்களை (காயங்களை) ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என வரலாற்றுப்பெயரினை பெற்றது
எமது ஊர்.
அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு
பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.
No comments:
Post a Comment