Sunday, 17 November 2013

பாசமும் – பணமும்



அந்தகாலத்தில் இருந்த உறவினர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, தட்டிக்கொடுத்தல், விட்டுக்கொடுத்தல்  இன்றைய நவீன காலத்தில் போலியாகவே உள்ளது அல்லது இல்லாமலே போய்விட்ட்து. இதற்க்கு காரணம் பணத்தின் மீது உள்ள மோகம்.
பணம் இருந்தால் இப்போது பாசமும், பந்தமும் தானாக வரும் ஆனால் அது உண்மையாக வராது என்பதே உண்மை.
பணம் என்ற நஞ்சினால் அன்று கூட்டுக்குடும்பமாக இருந்த நிலை மாறி இன்று குட்டிகுடும்பமாக உள்ளது.
பணம் இருந்த நிலையிலும் நம்மோடு இருந்து, பணத்தினை இழந்து நாம் பரிதவித்த நிலையிலும் நமக்கு ஆருதல் தரும் சொந்தங்களே உண்மையான சொந்தங்கள்.
நாம் இன்றய சமுகத்தில் மதிக்கதக்க வகையில் இருக்க வேண்டுமானல் நம்மிடையே வெறும் அன்பும், பாசமும், பண்பும் இருந்தால் மட்டும் போதாது பணம் இருக்க வேண்டும் என்பதே அப்பட்டமான உண்மை.
நல்ல முறையில் வாழ்ந்து விதியின் விளையாட்டினால் கெட்டு வறுமையின் பிடியில் வாழ்க்கையினை நகர்த்திக்கொண்டிருக்கும் குடும்பங்களின் நிலையினை சொல்ல வார்த்தைகளே இல்லை.
எனவே அன்பு, பாசம், நல்ல பண்பு, நேர்மை இருந்தால் மட்டும் போதாது கூடவே பணமும் இருக்க வேண்டும்.
பணம் இல்லாதப்போது தான் நம்மீது அலட்சியங்களும், நம்மை புறம்தள்ளுதலும், நம்மீது வசைப்பாடுவதும், நமக்கு மதிப்பளிக்காததும், நம்மைப்பற்றி புறம்கூறுதலும் நடத்தப்படுகின்றன என்பது இன்றுவரை நான் கண்கூடாகா பார்த்த, அனுபவித்த உண்மை.
எனவே இனி பணத்தினை நோக்கி என் பயணம் இருக்கும் அது நிச்சயமாக நேர்வழியில் எனது உழைப்பினால் வந்ததாகதான் இருக்கும்.
பணம் குறைவாக இருந்தாலும் அது வந்த விதம் நமக்கு நிறைவானதாக இருக்கவேண்டும்.

பிறறை ஏமாற்றி, திருடி, பிறர் சொத்துக்களை அபகரித்து, லஞ்சம் வாங்கி இன்று நாம் நம் வயிற்றினையிம், சொத்துக்களையிம் வளர்த்தால் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் நாளை அது நமது வம்சாவளியினையே ஒட்டுமொத்தமாக பாதித்து அழித்துவிடும்.

இதுப்போன்ற இழிச்செயல்களை வாழ்வதினை விட வாழ்வினை முடித்துக்கொள்வதே என்னைப்போறுத்தவரையில் சாலசிறந்தது.
அவமானத்தில் இருந்து பொறுமையினை கற்றுக்கொள்ள வேண்டும் தோல்வியில் இருந்து வெற்றிக்கான வழியினைக்கற்றுக்கொள்ள வேண்டும்.

வறியவருக்கும், வலியவருக்கும் கோபம் தான் முதல் எதிரி. எனவே மற்றவர்களின் மேல் உள்ள கோவத்தினை நமது குறிக்கோள்லினை அடைவதிலும், வெற்றியினைப்பெருவதிலும் நேர்மறையாக முழுவேகத்தில் வெளிப்படுத்தவேண்டும்.

நம் இன்றைய நிலைக்கண்டு வசைப்பாடுபவர்களை நாளை நம்மைப்பற்றி இசைப்பாட வையுக்கவேண்டும்.
இன்று நம்மை ஏசும் ஒவ்வொருபவர் மேலும் ஆத்திரப்படாமல் நாளை நமக்கு சாமரம் வீச்செய்யவேண்டும்.
 ‘’அவமானங்களை எப்போது ஒரு மனிதன் எதிர்க்கொள்ள துணிந்துவிட்டனோ அந்த நிமிடமே வெற்றி அவனை எதிர்க்கொள்ள துணிந்துவிட்ட்து என்று அர்த்தம்.’’

No comments:

Post a Comment