
வீரையா வாண்டையார்
தஞ்சை மாவட்ட பூண்டியில் 1899 இல் மிகவும் பிரபலமான கள்ளர் குடியில் பிறந்தவர் திரு வீரையாவாண்டையார். பூண்டி புஸ்பம் கல்லூரியை நிறுவி தஞ்சை வாழ் ஏழை எளிய மற்றும் பிற்பட்ட வகுபினரை சார்ந்த ஆயிரகனக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க உதவியவர் வாண்டைய்யர் அவர்கள். இக் கல்லூரியை ஒரு முன் மாதிரி கல்விக் கழகமாக அமைக்கும் பொருட்டு பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று பல் வேறு கல்லூரிகளையும் பார்வை இட்டு சிறந்த முறையில் இக் கல்லூரியை அமைத்தார். தங்கள் குலதெய்வமான புஸ்ப வாணேஸ்வரனை நினைவில் கொண்டு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி எனவும் பெயருமிட்டார்.
இக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் கள்ளர் குல மாணவர்கள் பல் ஆயிரம் பேர் இலவச உயர்கல்வி பெரும் வாய்ப்பினைப் பெற்று இன்று பொருளாதர நிலையில் மேன்மை அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. கள்ளர் மகாஜன சங்கத்தில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல மக்கள் உயர்வடைய வேண்டும் என்ற பெரு நோக்கில் அயராது உழைத்தவர் திரு வீரையா வாண்டையார் அவர்கள்.
தான் வெகுநாட்களாக தலைமை ஏற்று நடத்திவந்த கள்ளர் மகாஜன சங்கத்தை முக்குலத்தோர் நலத்தை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சங்கத்துடன் இனைத்து திரு மாணிக்கம் ஏற்றாண்டார் தலமையில் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தனது சமூகம் சார்ந்த மற்றும் வறுமையில் வாடிய மாணவ மக்களுக்கு தனது கல்லூரியில் இலவச படிப்பும் உணவும் அளித்து அவர்களின் வாழ்கையில் மறுமளர்ச்சி ஏற்படுத்தியது என்றும் மறக்கமுடியாத ஒரு வரமாகும்.
1970ம் ஆண்டில் மறைந்தும் மாணவர்கள் மத்தியில் வாழும் ஒரு அற்புதமான சிற்பி திரு வீரையா வாண்டையார் அவர்கள். இன்றும் தமிழக ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைத்திட வழிவகுத்த இப்பெருமானாரின் முயற்சியினால் கல்விப்பணியில் உயர்ந்து ஓங்கி நிற்கிறது இக் கல்லூரி
தஞ்சை மாவட்ட பூண்டியில் 1899 இல் மிகவும் பிரபலமான கள்ளர் குடியில் பிறந்தவர் திரு வீரையாவாண்டையார். பூண்டி புஸ்பம் கல்லூரியை நிறுவி தஞ்சை வாழ் ஏழை எளிய மற்றும் பிற்பட்ட வகுபினரை சார்ந்த ஆயிரகனக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க உதவியவர் வாண்டைய்யர் அவர்கள். இக் கல்லூரியை ஒரு முன் மாதிரி கல்விக் கழகமாக அமைக்கும் பொருட்டு பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று பல் வேறு கல்லூரிகளையும் பார்வை இட்டு சிறந்த முறையில் இக் கல்லூரியை அமைத்தார். தங்கள் குலதெய்வமான புஸ்ப வாணேஸ்வரனை நினைவில் கொண்டு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி எனவும் பெயருமிட்டார்.
இக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் கள்ளர் குல மாணவர்கள் பல் ஆயிரம் பேர் இலவச உயர்கல்வி பெரும் வாய்ப்பினைப் பெற்று இன்று பொருளாதர நிலையில் மேன்மை அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. கள்ளர் மகாஜன சங்கத்தில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல மக்கள் உயர்வடைய வேண்டும் என்ற பெரு நோக்கில் அயராது உழைத்தவர் திரு வீரையா வாண்டையார் அவர்கள்.
தான் வெகுநாட்களாக தலைமை ஏற்று நடத்திவந்த கள்ளர் மகாஜன சங்கத்தை முக்குலத்தோர் நலத்தை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சங்கத்துடன் இனைத்து திரு மாணிக்கம் ஏற்றாண்டார் தலமையில் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தனது சமூகம் சார்ந்த மற்றும் வறுமையில் வாடிய மாணவ மக்களுக்கு தனது கல்லூரியில் இலவச படிப்பும் உணவும் அளித்து அவர்களின் வாழ்கையில் மறுமளர்ச்சி ஏற்படுத்தியது என்றும் மறக்கமுடியாத ஒரு வரமாகும்.
1970ம் ஆண்டில் மறைந்தும் மாணவர்கள் மத்தியில் வாழும் ஒரு அற்புதமான சிற்பி திரு வீரையா வாண்டையார் அவர்கள். இன்றும் தமிழக ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைத்திட வழிவகுத்த இப்பெருமானாரின் முயற்சியினால் கல்விப்பணியில் உயர்ந்து ஓங்கி நிற்கிறது இக் கல்லூரி
No comments:
Post a Comment