Sunday, 17 November 2013

இவையெல்லாம் நான் செய்தது உண்டு நீங்கள்?




ஜன்னலோரம் நின்று மழையை ரசித்ததுண்டா
பாதிவழியில் மழை வந்தும் பதறி ஓடாமல் பால்ய சிநேகிதம் சிந்தியதுண்டா
மழைத்துளியை வாயில் பிடிக்க முயற்ச்சித்ததுண்டா
மழை நீரில் காகித கப்பலை மலேசியாவிற்க்கு அனுப்பியதுண்டா
மழையும் வெயிலும் சேர்ந்து வரும்ப்போது  காக்காய்க்கும், நரிக்கும் கல்யாணம் என்று கத்தியதுண்டா
இடி, இடிக்கும்ப்போது அர்ஜீனா, அர்ஜீனா என்று அலறியதுண்டா
மின்னல் மின்னும்ப்போது பெஞ்சமின் பிராங்கிளினை நினைத்ததுண்டா
மழை பெய்ய ஆரம்பித்த உடன் தொலைக்காட்சியில் விடுமுறை விட்டார்களா என்று பார்த்ததுண்டா
கூரையின் மீது விழும் மழைத்துளியின் சங்கீத சத்தம் கேட்துண்டா
அடை மழையில் ஆனந்த குளியல் போட்டதுண்டா
கொட்டும் மழையில் ஒரு குடையில் இருவராக கைகள் கோர்த்ததுண்டா
மழைக்கு அருகில் தேநீரை தேனாக சுவைத்ததுண்டா
சாறல் காற்றின் ஈரம் பட்டதுண்டா
தூறல் பார்த்து துள்ளி எழுந்ததுண்டா
சேற்றில், சகதியில் சறுக்கி விழுந்ததுண்டா
குளிர்மழையில் உ(எ)ன்னவளின் அருகே குளிர்காய்ந்ததுண்டா
வானவில்லின் வண்ணத்தில் மனம் லயித்ததுண்டா
வாழை மரத்தில் இடி விழுந்தால் தங்கமாக மாறும் கதை கேட்டதுண்டா
கத்தும் தவளையின் இருப்பிடம் தேடியதுண்டா
மழைக்கு மருகி மரத்தோரம் நிற்கையில் இடிக்கு பயந்து இரட்டிப்பு வேகத்தில் இல்லம் விரைந்ததுண்டா
இவையெல்லாம் நான் செய்தது உண்டு நீங்கள்?

No comments:

Post a Comment